Monday 30 December 2013

நாம நல்லா வருவோம்

'கிராமம் தோறும் காங்கிரஸ் வீடு தோறும் கை'
அடுத்து கையில் திருவோடுதாண்டீ!

'டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளதால் இன்று சட்டப் பேரவை செல்லவில்லை'
இப்ப அவர் அரசு அதிகாரி இல்லையென்று யாராவது அவருக்கு எடுத்து சொல்லுங்க! அதான்யா அரசியல்வாதிக்கும் அரசு அதிகாரிக்கும் உள்ள வித்தியாசம்!

'நிதி நிலைமை நிலையான தன்மை பெற மத்தியில் நிலையான அரசு அமைவது முக்கியம்'
அப்போ கடந்த பத்தாண்டுகளா நிலையான அரசு அமையவில்லையா அல்லது அரசே அமையவில்லையா?  என்ன கொடும சார் இது!

'சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி புதிய கட்சியை வரும் பொங்கல் அன்று தொடங்கவுள்ளார்'
சைதாப்பேட்டையும் வரும் தென்சென்னை தொகுதியில் போட்டியிடுவதால் எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என்பதை "மக்கள் பாதுகாப்பு கழகம்" சார்பாக இப்போதே பதிகிறேன்.

'அரசுத் துறைகளில் லஞ்சம் வாங்கும் ஊழல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களில் 15 பேர் கொண்ட பட்டியல் வெளியீடு'
பட்டியலில் இடம்பெறாதவர்களின் வீட்டம்மணிகள் வெகுண்டெழுந்து கணவர்களை "நீ அதற்கும் லாயக்கில்லையா" என்று சொல்லியிருப்பார்களோ?

'போதி தர்மருக்கு காஞ்சியில் நினைவிடம்'
இதற்கும் அன்னிய முதலீடு தேவைப்படுவதால் சீனா-ஜப்பான் உதவுகிறது போல!


தமிழன் என்று சொல்லடா...

அரசு என்பது தன்னலமற்று பொதுநலத்துக்காக செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. அனால் இன்றைய அரசுகளோ குறுகிய சிந்தனைகளோடு ஒரு ஐந்தாண்டுகளில் தன்னால் முடிந்தளவு நாட்டை சூரையாடிவிட கிடைத்த வாய்ப்பாகவே கருதி செயல்படுகின்றன.

சில நூறு ஆண்டுகளுக்கு முன் வந்த முகலாயர்கள் குட்டி குட்டி ராஜ்ஜியங்களாக இருந்தவற்றை ஒன்றாக்கி அகண்ட பாரதத்தை படைத்தனர். பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி இங்கிருந்த வளங்களை கொண்டு சென்றனர்.  ஆனாலும் அவர்கள் இந்தியாவில் பலப்பல கட்டுமான வசதிகளை உருவாக்கித்தந்தனர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.  நாட்டை விட்டு வெளியேறும் போது இந்தியாவை துண்டாக்கிவிட்டு, இனி இந்தியா எப்போதும் தனக்குள்ளே அடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று ஒரு விதையையும் மிகவும் ஆழமாக ஊன்றிவிட்டு சென்றனர்.

விடுதலை அடைந்த இந்தியாவானது தன்னைத்தானே உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக முன்நிறுத்திக்கொண்டது.  காலப்போக்கில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆள்பவர்களின் தகுதிகள் என்பது மிகவும் கேலிக்குறியதாகி போனது.  பொதுநலம் என்பது காணாமல் போய் சுயநலம் மட்டுமே இப்போது எஞ்சியுள்ளது.

ஒரு காலத்தில் தனியார்வசம் இருந்த போக்குவரத்து துறை மிகவும் இலாபகரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.  பின்னர் அரசு அத்துறையை அரசுடைமை ஆக்கியது.  ஆனால் அதற்குபின் அது ஒரு ஊழல் நிறைந்த, நஷ்டத்தில் இயங்கும் துறையானது.  அதே போல அரசு நூற்பாலைகளில் தன் கை வைத்தது.  எவ்வளவு சுட்டுக்கொள்ள வேண்டுமோ அவ்வளவு காயம் ஏற்படுத்திக்கொண்டது.  இவை சில உதாரணங்கள் மட்டுமே!  இதே போல அனைத்து துறைகளும் வீழ்ந்தே கிடக்கின்றன.

பொதுவாக நாம் ஒரு தொழில் செய்தால் அதை நிச்சயமாக லாபத்திற்காகவே செய்வோம்.  தொழில் நஷ்டத்திலோ அல்லது போதிய அளவு லாபமோ இல்லாதபட்சத்தில் நிச்சயமாக நாம் அதை சீர்படுத்த எண்ணுவோம் அல்லது அத்தொழிலை தலைமுழுகிவிட்டு  உருப்படியாக ஏதாவது வேறு வேலை செய்ய சென்றுவிடுவோம்.  ஆனால் அரசு என்பது அப்படி செய்யாது அல்லது செய்யவும் கூடாது.  ஆனால் அதே நேரத்தில் செய்பவற்றை தெளிவாக செய்ய வேண்டாமா? நம் நாட்டில் என்ன குறை உள்ளது?  மெத்தப்படித்தவர்களுக்கு குறையா இல்லை மனித வளம்தான் குறைவாக உள்ளதா அல்லது மற்ற வளங்கள்தான்  குறைவாக உள்ளனவா இல்லையென்றால் கட்டுமான வசதிகளில்தான் குறைச்சலா?  என்னை பொருத்தவரையில் ஆள்பவர்களின் மனநிலையிலும் எண்ணங்களிலும்தான் குறை தெரிகிறது.

கல்வி சுகாதாரம் விவசாயம் போன்ற துறைகளை இப்போது அரசாங்கம் தன்னால் நடத்த முடியாமல் தனியாரிடம் ஒப்படைக்கிறது.  சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கழிந்தும் நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியாமல், தனியாரிலிருந்து பொதுத்துறையென்றும் பின் மீண்டும் தனியார்வசம் என்றும் அரசு குழப்பிக்கொண்டிருக்கிறது.  எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் துறை மட்டுமே முன்னேறி வருகிறது.  கடைசியில் இப்போது இத்துறை அரசியல் வாதிகளிடமிருந்து சாதாரண மக்கள் வரை பரவிவிட்டது.  இப்போது மக்களும் தெளிந்துவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.  ஒவ்வொரு தேர்தலின்போதும் பணம் அல்லது பொருள் பெற்றுக்கொண்டே வாக்கு அளிக்கின்றனர்.  நல்ல வளர்ச்சிதான்!

என்னுடைய குறையெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.  டாஸ்மாக்-ல் மட்டும் இலக்கு வைத்து லாபம் பார்க்க முடிகின்ற அரசால் ஏன் கல்வி சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் வெற்றிகரமாக செயல்பட முடிவது இல்லை?

சில மாதங்களுக்கு முன் சத்தியமே ஜயதே எனும் நிகழ்ச்சியில் ஒரு ரூபாய்க்கான மாத்திரை, முப்பது ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பதாக சொல்லப்பட்டது. மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தி அதை அனைவருக்கும் கிடைக்கச்செய்ய முடியவில்லையென்றால் பின் அந்த சுகாதாரத்துறை இருந்து என்ன பயன்?

திரு சகாயம் சொல்வது போல ஒரு நாள் முழுவதும் துணி நெய்யும் நெசவாளிக்கு ஒரு நாள் கூலியாக 75 ரூபாய் கிடைக்கிறது.  அதை கவனிக்கும் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு ரூபாய் 300 முதல் 3000 வரை ஒரு நாள் சம்பளம்.  அது போக லஞ்சம் தனி.  நெசவாளர்களுக்கு வாரியம் அமைத்து அதில் சுருட்டியவர்கள் எத்தனை எத்தனை பேர்?

நாட்டில் கருப்புப்பணம் என்பது நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அதிகரித்துக்கொண்டே செல்லும் போது, வருமான வரித்துறையை இழுத்து மூடிவிட வேண்டியதுதானே?  பாவம் மாதச்சம்பளம் வாங்குபர்களாவது நிம்மதியாக இருப்பார்கள்.

வேற்றுமையில் ஒற்றுமையை காணும் நாம் ஏன் பயன்படுத்தும் தண்ணீருக்காக வேறுபட்டு இருக்கின்றோம்?

சாதிகளில்லையடி பாப்பா என்று முழங்கிய பாரதியை மறந்து இன்று ஜாதிகளை கணெக்கெடுத்தால் வரும் விழுக்காடு நூறைத்தாண்டுகிறதேன்? சுதந்திரமடைந்த இந்த 65 ஆண்டுகளில் ஜாதிகளை வளர்த்தல்லவா இருக்கின்றோம்.

விவசாயிகளின் தற்கொலைகள், பெண்கள்/குழந்தைகளுக்கான பாதுகாப்பின்மை, குழந்தை தொழிலாளிகள், மின்சாரம், குடிக்க நல்ல தண்ணீர் இல்லாமை என்று பிரச்சனைகள் ஆயிரம் இருக்கும்போது சாராயத்திற்கு மட்டும் இலக்கு நிர்ணயித்து அரசு கல்லா கட்டுகிறது.  ஒரு காலத்தில் ராஜாஜி வரி அறிமுகப்படுத்திய போது அரசு நலத்திட்டங்களுக்கு நிதி திரட்டவே, வரி விதிக்கப்படுகிறது என்று கூறி வழிகாட்டினார்.  இப்போதும் சாராயம் விற்பதில் வரும் வருமானம் இல்லையெனில் அரசு நடத்துவது இயலாத காரியம் என்று மக்களை ஏமாற்றுகின்றனர்.   எந்த போதையாக இருந்தாலும் அது கேட்டையே விளைவிக்கும்.  ஆனால் இன்றோ நம் நாட்டு மக்கள் மதுவின் போதையில் சிக்கி சீரழிந்துக்கொண்டுள்ளனர்.

நாம் எப்போது தலை நிமிர்ந்து நடப்பது?

மது இல்லாமல் புத்தாண்டை இனிதே கொண்டாடுவோம்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Friday 27 December 2013

எனக்கு ஒரு சந்தேகமுங்க!

எழுவதுக்கு 28 மதிப்பெண்கள் பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கேஜ்ரிவால் முதல்வர் பதவியேற்றது முதல், ஏழு நாட்களில் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டுமாம்.
ஒரு மனுஷனுக்கு எப்படியெல்லாம் விதி விளயாடுதுன்னு பாருங்க!

திமுக கூட்டணியில் தேமுதிக வந்தால் தனக்கு மகிழ்ச்சியே என்று டமில் வாட்ச்மேன் கூறியுள்ளார்.  கருப்பு எம்ஜியார அப்படியே ஓய்ச்சுடலாம்னு செமயா ப்ளான் பண்றாருன்னு நினைக்கேன்!  சகலகலாவல்லவர் டி ஆர் திமுக-வில் இணைந்தார்.  சட்டசபைக்கு ஒரு வடிவேலு என்றால் பாராளுமன்றத்துக்கு டி.ஆர்!
என்னங்க நான் சொல்றது சரிதானே?

பத்தாவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான தேர்வில் புதிய பார்கோடுடன் கூடிய விடைத்தாளை அறிமுகப்படுத்துவதால் தேர்வின் போது மாணவர்களோ அல்லது விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்களோ செய்யும் முறைகேட்டை முற்றிலுமாக தடுக்க முடியுமாம்.  அதைவிட எக்ஸாமே இல்லேன்னா முறைகேடே நடக்காதேங்க!
அல்லாரும் ஆல் பாஸ்!  நோ சூஸைட்ஸ்!  கரீட்டாப்பா?

மோடிக்கு செக் வைக்க காங்கிரஸ் சைபர் படை அமைக்க திட்டமிட்டுள்ளதாக நம்பகமான செய்திகள் கூறுகின்றன.  அதை நடைமுறை படுத்துவதற்காக ஒரு திட்டம் வரும் 2025-ற்குள் தயாரிக்கப்பட்டு அதில் உறுப்பினர்களை 2052-க்குள் சேர்த்துவிடுவார்கள்.  உறுப்பினர்களின் முக்கிய தகுதியாக அவர்களின் வயது இன்றோடு 60 பூர்த்தியாகி இருக்கவேண்டும்.  அப்போதுதானே துள்ளிகுதித்து ஒரு உத்வேகத்துடன் செயல்படமுடியும்!
என்ன, நான் சொல்றது சரிதானே?

மூத்த குடிமக்களுக்கு ரயிலில் இலவச புனிதப் பயணம்: தமிழக அரசு பரிசீலனை

திருச்சி சந்திப்பில் காஃபி வாங்க நின்றிருந்தவரிடம் ஒரு பெண் வந்து தனக்கு தலை சுற்றுகிறது. நின்று காஃபி வாங்க முடியவில்லை! எனக்கும் ஒரு காஃபி வாங்கித்தாருங்கள் என்று கூறியுள்ளார்.  பாவம் என்று நினைத்து காஃபி வாங்கிதந்தவரை வாருங்கள் உட்கார்ந்து பேசலாம் என்றழைத்தவர் தனக்கு பணப்பிரச்சனை உள்ளது.  எனவே எனக்கு உதவிசெய்தால் உங்களோடு உல்லாசமாக இருக்க நான் தயார் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார். இதை கேட்டு திடுக்கிட்ட அவர் ஒரு காஃபியோடு சனியன் தொலையட்டும் என்று ஓடி ஒளிந்துவிட்டார்.
நாட்டில் ஆண்களுக்குத்தான் எவ்வளவு சிரமங்கள்?!

நேற்றைய தினத்தந்தியில் ஒரு செய்தி புகைப்படத்துடன் வந்துள்ளது.  அதில் லிபியாவின் தலைநகர் பெய்ருட்டில் நடந்த குண்டுவெடிப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  நான் படித்த பூகோளத்தில் லிபியாவின் தலைநகரம் திருப்போலி என்று ஞாபகம்.  பெய்ருட் என்பது லெபனான் நாட்டின் தலைநகரம். வாழ்க தமிழ் பத்திரிக்கைகள்!

மதுரை சட்டக்கல்லூரி மாணவி, தமிழகத்தில் மதுவிலக்கை கோரி உண்ணாவிரதம் இருப்பதை எந்த பத்திரிக்கை/தொலைகாட்சிகளும் வெளிச்சம் போட்டு காட்டாமல் புறக்கணிப்பதாக எனக்குப்படுகிறது. நாமதாம்பா அந்த பொண்ணுக்கு ஆதரவு கொடுக்கணும்!

வரும் தேர்த்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நான் பிரதமராகமாட்டேன், ராகுலுக்கு வழிகாட்டுவேன் என்று தொடர்ந்து பத்து ஆண்டுகள் இந்த தேசத்தை ஆண்ட, நேரு குடும்பத்திலிருந்து வராத, பாராளுமன்ற தேர்த்தலை சந்திக்காத மாபெரும் சாதனையாளர் திரு மன்மோகன் சிங் சூளுரைத்துள்ளார்.
எஸ்கேப்டா சாமி

வாங்க பழகலாம்

நேர்மையான அதிகாரிகள் மற்றும் நேர்மையாக இருந்த காரணத்தினால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள், மேலும் ஒய்வூதியம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப் படும் அதிகாரிகள் தங்களை எஸ் எம் எஸ் அல்லது இ மெயில் மூலம் தொடர்பு கொண்டால், அவர்களுக்கு நல்ல தீர்வு தமது ஆட்சியில் கிடைக்கும் என்றும், நேர்மையான அதிகாரிகளுக்கு நல்ல பதவி வழங்கப்படும் என்றும் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந்தமாயி என்று பெயர் சூட்டப்பட்டது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ராஜஸ்தானில் தானமாக பெற்ற கண்களை பயன்படுத்தாமல் வீணடிக்கப்பட்டது அறியப்பட்டுள்ளது.இப்பிரச்னை குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேந்திர ரத்தோர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள ஏழு கண் வங்கிகளில் ஆய்வு நடத்தி ஒரு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Wednesday 25 December 2013

எலெக்ஷன் வருதுங்கோ - 1

ஆல்ரெடி பாஜக-வினர் வல்லபாய் படேலுக்கு சிலை வைக்க நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இப்போது காங்கிரஸ், ஷத்ரப்தி சிவாஜிக்கும் சட்டமாமேதை அம்பேத்கருக்கும் மகாராஷ்டிராவில் சிலை அமைக்க முயன்றுகொண்டிருக்கிறது.

சிலை வைப்பது ஒரு ட்ரெண்ட் என்றால் இன்னொரு டிரெண்ட் சிறுபான்மை மதத்தினரை குளிரவைப்பது.  நேற்று க்றிஸ்மஸ்ஸை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும்போது பல அறிய தகவல்களை அறிய முடிந்தது.

இத்தாலி நாட்டில் இருந்து வந்து தமிழ்த்துறவியாக வாழ்ந்து, "தத்துவ போதகர்" எனத் தம் பெயரையே மாற்றிக்கொண்டு தமிழ் மொழியின் உரைநடைக்கு உயிர் தந்த இராபர்ட் டி நொபிலி! அதே இத்தாலியில் இருந்து வந்து கிருத்தவத் தொண்டுகளுடன் ஏசுநாதரின் வரலாறு கூறும், "தேம்பாவணி" தமிழுக்கு அகராதிக் கலையை அறிமுகப்படுத்திய, "சதுரகராதி" உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் படைத்த வீரமாமுனிவர்!
செர்மானிய நாட்டிலிருந்து வந்து தரங்கம்பாடியில் முதன்முதல் அச்சுக்கூடத்தையும், பொறையாற்றில் காகித ஆலையையும் நிறுவி "தமிழ் – இலத்தீன் அகராதி", "பைபிள்" தமிழ் மொழிபெயர்ப்பு முதலான நூல்களையும் படைத்த சீகன் பால்க் அய்யர்!
இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்து சமயப் பணிகள் ஆற்றியதுடன், "திருக்குறள்", "திருவாசகம்", "நாலடியார்" ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு; தம் தாயகம் திரும்பிய பின் வெளியுலகுக்குத் தமிழின் மேன்மையைப் புலப்படுத்தி, "நான் ஒரு தமிழ்மாணவன்" எனத் தம் கல்லறையில் எழுதச் செய்த ஜி.யு.போப்!
அயர்லாந்து நாட்டில் பிறந்து, தமிழகம் வந்து நெல்லைச் சீமையில் தங்கி, "திருநெல்வேலி சரித்திரம்"" எனும் ஆங்கில நூலுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு உள்ளிட்ட திராவிட மொழிகள் அனைத்தையும் ஆய்வு செய்து, "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" எனும் அரிய நூலையும் படைத்து; தமிழ் மொழியின் மேன்மையை மேதினியில் நிலைநாட்டியதுடன் தமிழைச் செம்மொழி என முதன்முதல் பறைசாற்றிய மாமேதை கால்டுவெல்!

இப்படி பலரை நாம் இப்போது மீண்டும் தூசி தட்டி நினைவுபடுத்திக்கொண்டிருப்பதற்கு மிக முக்கிய காரணம் எலெக்ஷன் வருதுங்கோ!  உங்க ஓட்டு எங்களுக்கேங்க!

Tuesday 24 December 2013

அறிவோம்

சூரிய மின்சக்தியை பயன்படுத்தி பம்ப்செட் மோட்டாரை இயக்கி விவசாயம் செய்கிறார் திரு மாரியப்பன்.  சேலம் மாவட்டம் தார்க்காடு கிராமத்தை சேர்ந்த இவர் சில மாதங்களுக்கு முன் தன் வீட்டின் கூரையில் சூரிய மின் தகடுகளை பொருத்தி 7.5 குதிரைத்திறன் கொண்ட மோட்டரை இயக்கி தனது பத்து ஏக்கர் நிலத்துக்கு நீர் பாசனம் செய்கிறார்.   இதற்கு ஏழரை இலட்சம் செல்வானது என்றும் அதில் அரசு மானியமாக இரண்டேகால் இலட்சம் கிடைத்தது என்கிறார், திரு மாரியப்பன்.  கன் ஸ்பிரே மூலம் நீர் பாய்ச்சி சோளம் மற்றும் கரும்பு விளைவிக்கும் இவர் கூறும்போது அடுத்த இருபது ஆண்டுகளுக்கு இனி தனக்கு மின்சார தேவை ஏற்படாது என்றும் நீரும் குறைந்த அளவே பயன்படுத்தப்படுகிறது என்றும் நம்பிக்கையோடு தெரிவித்தார்.
வாழ்த்துக்கள் திரு மாரியப்பன்!

டில்லி முதல்வராக பதவி ஏற்க உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் திரு அர்விந்த் கேஜ்ரிவால் தனக்காக ஒதுக்கப்பட்ட அரசு வீட்டை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.  அதே போல தனக்கு தரப்பட இருந்த இசட் பிரிவு பாதுகாப்பையும் தேவையில்லை என்றும் கூறிவிட்டார்.  தனக்கு பொதுமக்களும் கடவுளுமே பாதுகாப்பார்கள் என்றும் கூறிவிட்டார்.  பொதுவாக ஒரு முதல்வரை சந்திக்க பொதுமக்கள் பலரும் வந்து செல்வார்கள்.  மேலும் பல முக்கியஸ்தர்கள் அவரை சந்திக்க வருவார்கள்.  அப்படி இருக்கும்போது தன்னுடைய வீட்டில் இவரை சந்திக்க வருபவர்களுக்கும் சவுகரிய குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.  மேலும் அங்கு அவரை சுற்றியுள்ள மற்ற குடும்பத்தினருக்கும் பல இன்னல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.  எனவே திரு கேஜ்ரிவால் முதல்வருக்காக அரசு அமைத்துள்ள வீட்டில் தங்குவதே அவருக்கும் சவுக்கரியம்.  அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் சவுக்கரியமாக இருக்கும்.  தேவையில்லாத ஸ்டண்ட் வேண்டாம் கேஜ்ரிவால்ஜி!

ஆங்கில புத்தாண்டு அன்று டாஸ்மாக்-ல் நூறு கோடி ரூபாய்க்கு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  நாடு விளங்கிடும்!




க்றிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்




Monday 23 December 2013

நாம நல்லா வருவோம்

ஆம் ஆத்மி கட்சித் தலைவரின் எம் எல் ஏ பதவி பறிக்கப்படுமா?
டெல்லியில் நாளை ஆட்சியை அமைக்க உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால்.  இவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது அதில் தான் பிறந்த இடத்தை மாற்றி குறிப்பிட்டுள்ளார்.  இதை இப்போது மதுரை மாநகராட்சி துறையினர் "கேஜ்ரிவால் மதுரையில் பிறந்தார்" என்ற சான்றிதழ் கொடுத்துள்ளனர்.  எனவே தேர்தல் கமிஷன் அவசரமாக கூடி ஒரு நல்ல முடிவெடுக்கும் என்று நம்புவோமாக.  வாழ்க மதுரை மாநகராட்சியின் சேவைகள்!

வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்ற செக்ஸ் தொழிலாளிகளுக்கு நிவாரண மையம் அமைக்க மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளது.  அவர்களை மதிப்பு மரியாதையோடும் வசதியோடும் ஒரு கூறையின் கீழ் வாழவைப்பதே இத்திட்டத்திற்கான காரணம் என்று பெண்கள் மற்றும் சமூக நல மேம்பாட்டு துறையின் செயலாளர் ஷஷி பாஞ்சா PTI-க்கு தெரிவித்தார்.

அமெரிக்காவிலுள்ள லூசியானா மாகாணத்தின் கவர்னராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த பேபி ஜிண்டால் 2016-ல் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று செனட்டர் டேவிட் விட்டர் தெரிவித்தார்.  தனது பெயரிலேயே ஜோக்காளி (விட்டர்) என்று உள்ளதால் இப்படி சொல்லியிருப்பாரோ?

ஆம் ஆத்மி கட்சியின் பிகார் கிளை திறப்பு:
டெல்லியில் ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையில் எம் எல் ஏ-க்கள் இல்லாதபோதும் முக்கிய கட்சிகள் ஆட்சி அமைக்க மறுத்ததாலும் வேறு வழியின்று மாட்டிக்கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் பிகார் கிளை நேற்று கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.  பீகாரின் பெகுசராய் பகுதியில் முதல்வர் நிதிஷ்குமார் பேசிய கூட்டத்தில் அவர் மீது செருப்பு வீசி கட்சி வேலையை ஆரம்பித்துள்ளனர்.  எனினும் செருப்பு வீசியவர் யார் என்பது இன்னும் தெரியாது இருப்பதால் எம் எல் ஏ பதவி யாருக்கு கொடுப்பது என்பதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.


எம் எல் ஏ பதவியை முதல்வர் ராஜினாமா செய்தார்!

இன்றைய சிந்தனை:
நீந்தும் போது ஆழம் என்பது ஒரு பொருட்டே அல்ல.
தொடர்ந்து நீந்தும் போது, கரை தொட்டுவிடும் தூரமே!



மத்திய பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் தன்னுடைய இரண்டு எம் எல் ஏ பதவிகளில் ஒன்றான விதிஷா தொகுதி எம் எல் ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

டிஸ்கி:
இப்படி தலைப்பை போட்டு தானே பல பத்திரிக்கைகளும் பதிவர்களும் பிரபலமடைகின்றன.  எனவே ஏன் நாமும் ட்ரை பண்ணக்கூடாது என்று ஒரு சின்ன நப்பாசை.


Sunday 22 December 2013

நாம் மாங்காயா இல்லை (வாழைப்)பழமா?

திமுக-வின் ஊழலால் காங்கிரஸுக்கு அவப்பெயர் என்று மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார்.  அதாவது ஊழல் என்றாலே காங்கிரஸ்தான் என்று இருக்கும்போது திமுக ஊழல் செய்ததால் அது காங்கிரஸுக்கு அவப்பெயர்தானே!  முதல் முறை மனசாட்சிக்கு பயந்து உண்மையை பேசியுள்ள அமைச்சருக்கு காமன்வெல்த்தில் ஆரம்பித்து ஆதர்ஷ் வரையிலான ஒரு லட்சத்து எழுபத்தாயிரம் கோடி நன்றிகள்.

கட்சிக்காக இல்லாமல் நாட்டுக்காக ஓட்டளியுங்கள் என்று மோடி மும்பை மாநாட்டில் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.  அப்போ அந்த மோடி அலையெல்லாம் சும்மா டூப்பா?  வீடுதோறும் தாமரை என்றது கப்ஸாவா?

ஏமன் நாட்டில் தன் மகளை திருமணம் செய்ய ஃபேஸ்புக்கில் பத்து லட்சம் லைக்ஸ் வாங்கிவந்தால்தான் சம்மதிப்பேன் என்று ஒரு ஹை-டெக் தந்தை அறிவித்துள்ளதால் மணமகன் பாடு படு திண்டாட்டமாகிவுள்ளது.  செத்தாண்ட சுகுமாரு!

அண்மையில் தென்னாப்ரிக்கா மற்றும் கென்யா பயணம் செய்த இலங்கை அதிபர் தன் சகாக்களுடன் துபாய் வழியாக இலங்கைக்கு பயணம் செய்தபோது துபாய் ட்யூட்டி ஃப்ரீ-யிலிருந்து ஒரு CCTV காமெராவை திருடியவரை காவலர்கள் பிடித்து விசாரித்ததில் அவர் ராஜபக்சேவின் குழுவில் இடம்பெற்ற காமெராமேன் என்பது தெரியவந்துள்ளது.  அவரை எச்சரிக்கை செய்து துபாய் விமான நிலைய அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.  ரத்தவெறி பிடித்த திருட்டு பயல்கள்போல!

தமிழர் வரலாற்றில் பிரணாப் முகர்ஜிக்கு மன்னிப்பே கிடையாது என்று "அரசியல் திலகம்" வைகோ கூறியுள்ளார்.  எனவே இவர் பாஜக-வோடு கூட்டணி வைத்து பாவமன்னிப்பு தேடுகிறாரோ?
இப்படிக்கு
அரசியல் திலகம் வைகோ பாசறை

Saturday 21 December 2013

நாம் மாங்காயா இல்லை (வாழைப்)பழமா?

தேவ்யானிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.  அப்படியென்றால் அவர் வீட்டுக்கு வீட்டு வேலைக்காக வந்து ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு போராட செவ்வாய் கிரகத்திலிருந்து தான் யாரையாவது அழைத்துவர வேண்டும்போல!
தலைப்பை மீண்டும் ஒரு முறை வாசித்துக்கொள்ளுங்கள்.

கட்சி பணியாற்ற பல அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர்.  திருமதி ஜெயந்தி நடராஜன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.  அப்போ இத்தனை நாட்களாக யாரும் கட்சிக்காக வேலை செய்யவில்லையா?  அப்போ ராகுல் காந்தி இத்தனை நாட்களாக செய்துகொண்டிருந்தது எல்லாம் சும்மா டூப்பா?
எங்கேயோ கேட்கும் குரல்...

கட்டக்கடசியாக லோக்பால் சட்டம் நிறைவேறிவிட்டது.  ஆனால் உங்கள் புகார் உண்மை என்று நீங்கள் நிரூபிக்கவில்லையென்றால் உங்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை கிடைக்கும். புகார் செய்ய நீங்க தயாரா?
அவங்கயெல்லாம் என்ன நம்மை போன்று மாங்காயா அல்லது பழமா?


Friday 20 December 2013

நாம் மாங்காயா இல்லை (வாழைப்)பழமா?

போன முறை ஆட்சியில் இருக்கும் போது பிடித்த எண் 9.
ஆனால் இம்முறை பிடித்தது 7ஆம் எண்.
அப்போ 40 இடங்களில் எப்படி போட்டியிடுவது?
34, 25, 16 அல்லது 7-ல் அல்லவா போட்டியிடவேண்டும்?
அல்லது தமிழகத்தை 43 தொகுதிகளாக்கப்பட்ட பின் போட்டியிடவேண்டும்.
இப்படிக்கு
நாங்க அப்பவே அப்படி, இப்ப...? குழுவினர்
மற்றும்
ஏழறை மட்டுமே பிடித்த மாக்கள்

உலகிலேயே கணணி மென்பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடத்தில் இருப்பவர்கள் இந்தியர்கள், அதிலும் குறிப்பாக தமிழர்கள்.  அப்படி இருக்கும்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு ரேஷன் கார்ட் renewal பண்ண முடியாமல் காலம் தாழ்த்துகிறது தமிழக அரசு.  இதுவும் மத்திய அரசின் சதித்திட்டமாக இருக்கமோ?
இப்படிக்கு
ஒரு அதிமுக மாங்கா

கணவருக்கு எம் ஆர் ஐ ஸ்கேன் செய்வதற்காக மரத்தான் ஓட்டத்தில் கலந்து ரூபாய் ஐந்தாயிரம் பரிசை தட்டிச்சென்ற அறுபத்தியாறு வயது லட்சியப்பெண். நாம எல்லாம் வலைத்தளங்களில் ஸ்டேடஸ் அப்டேட் செய்யவும் லைக் போடவுமே பிறந்தவர்கள்.  எனவே நாங்கள் மாங்காவும் இல்லை (வாழைப்)பழமுமில்லை.  களிமண்கள்!

அமலாகிறது கஸ்தூரிரங்கன் அறிக்கை: நடவடிக்கையை துவக்கியது மத்திய அரசு - இது தினமலர் செய்தி
கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைக்கான ஒப்புதல் ரத்து - இது தி இந்து செய்தி
யாருக்கு எது வேணுமோ அதை எடுத்துக்கொள்ளவும்.  அனைத்துதரப்பு மக்களையும் திருப்திபடுத்துவது "ஊடகத்துறை"
இப்படிக்கு
நான் படித்ததே சரி என்று வாதாடுவோர் சங்கம்

Thursday 19 December 2013

நாம் மாங்காயா இல்லை (வாழைப்)பழமா? பகுதி2

தமிழகத்திற்கு பாதகமான மத்திய அரசை தூக்கியெறிய வேண்டும்!
பக்கத்திலுள்ள சீனா போன்ற பெரிய நாடுகள் மட்டுமின்றி மியான்மர் போன்ற சிறிய நாடுகளின் மிரட்டலைகூட சமாளிக்க முடியாத மத்திய அரசை தூக்கியெறியவேண்டும்!
கடந்த இரண்டரை ஆண்டுகளில் தன் தலைமையில் தமிழகத்தில் நடக்கும் நல்லாட்சி செய்த ஏறாளமான சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் பரப்பினால் அடுத்த தேர்த்தலில் இந்த மத்திய அரசை தூக்கியெறியமுடியும் என்று அதிமுக பொதுக்குழுவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா கடைசியாக அதிமுக செங்கோட்டை அடைவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார்.  இப்போது மீண்டும் தலைப்பை வாசித்துக்கொள்ளுங்கள்!

உலகிலுள்ள நாடுகளில் சிங்கப்பூர் என்பது பாதுகாப்பு விஷயத்தில் முக்கிய இடம் பிடித்துள்ள நாடு.  நாம் ஒரு நாட்டுக்கு சென்றால் அந்த நாட்டின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.  ஒருவர் விபத்தில் மரணமடைந்தார் என்றால் அதில் தவறிழைத்தவருக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.  ஆனால் சினிமாவையும் மதுவையும் வாழ்க்கையாக கொண்ட நாம் செய்த கலவரத்தால் ஐம்பத்திரண்டு பேர்களை சிங்கப்பூர் தாய் நாட்டிற்கு திருப்பியனுப்புகிறது.  பிழைக்கச்சென்ற இடத்தில் நமக்கு இதெல்லாம் தேவையா? நாம் மாங்காயா இல்லை (வாழைப்)பழமா?

ஏற்கனவே ஏகப்பட்ட சட்ட விதிமுறைகள் இருந்தும் லோக்பால் வந்துவிட்டால் யாருமே தவறிழைக்கமாட்டார்கள் என்று நம்பும் நாம் மாங்காயா இல்லை (வாழைப்)பழமா?

Wednesday 18 December 2013

நாம் மாங்காயா இல்லை (வாழைப்)பழமா? பகுதி1

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அன்னை அமேரிக்க ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட போது அங்கேயே SFJ போட்ட வழக்கில் சம்மன் கொடுக்கப்பட்டது.  அப்போதே தில்லாலங்கடி செய்து எஸ்ஸாகி வந்துவிட்டார். இப்போது மூன்று நாட்களுக்கு முன், அதாவது 16 டிஸம்பரில் மீண்டும் அந்த கேஸில் உடனடியாக ஜனவரி 2ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அமேரிக்க கோர்ட் மீண்டும் கேட்டுக்கொண்டதை அடுத்து உடனடியாக களத்தில் குதித்த இந்திய அரசு, தேவ்யானி விவகாரத்தை ஊதி பெரிதுபடுத்திவருகிறது.  கடந்த பல நிகழ்வுகளில் முன்னாள் ஜனாதிபதிகளிலிருந்து பல முக்கிய பிரமுகர்களையும் அமேரிக்கா அவமானப்படுத்தியபோது ஏற்படாத வன்மம்/கோபம் இந்திய அரசுக்கும் நமது மீடியாவுக்கும் இப்போது மட்டும் ஏன்?  (இங்கு மீண்டும் தலைப்பை ஒரு முறை வாசித்துக்கொள்ளவும்)

கடந்த வார இறுதியில் ஒரு கார் விபத்து ஏற்பட்டது.  இதில் இருவர் கொல்லப்பட்டனர்.  இது எந்த இந்திய செய்தித்தாள்களிலும் வரவில்லை. ஏனெனில் விபத்து ஏற்படுத்திய கார் இந்தியாவின் மிகப்பெரிய புள்ளிக்கு சொந்தமானது என்பதால்.  ரிலையன்ஸ் போர்ட் & டெர்மினல்ஸ் லிட். எனும் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட அந்த வாகனத்தை அன்று ஓட்டியது அந்நிறுவனத்தின் ஒரு தொழிலாளி தான்தான் என்று ஒரு ஆடு போலீஸில் சரணடைந்துள்ளது.   (இங்கு மீண்டும் தலைப்பை ஒரு முறை வாசித்துக்கொள்ளவும்)

ஆம் ஆத்மி பார்ட்டி என்பதன் உண்மையான அர்த்தம் ஆமாஞ்சாமி கட்சியா இல்லை "மாங்கா" மக்கா கட்சியா (आम = ஆம் = மாங்காய்) அல்லது பொது மக்கள் கட்சியா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.  அதுவரை மீண்டும் தலைப்பை ஒரு முறை வாசித்துக்கொண்டிருக்கவும்.

Tuesday 10 December 2013

தமிழ் "படுத்தல்"

முன் டிஸ்கி :  இந்த பதிவில் உள்ள வேற்று மொழி வார்த்தைகள் எத்தனை என்பதை சரியாக பின்னூட்டத்தில் சொல்பவர்களுக்கு "தமிழ் பதிவர் சுடர்" என்ற பட்டம் தரப்படும்....

கரெக்ட்டா காலை ஏழு மணிக்கு அலாரம் அலறியதை தொடர்ந்து நான் எழுந்தேன். எழுந்ததும் எனது முதல் வேலை ப்ரஷ் செய்வது.  அது முடிந்ததும் வைஃப் ரெடியாக போட்டுக்கொடுக்கும் டீயை குடித்துதான் அவுட்சைட் போய் ஃப்ரீ ஆவது. இவையெல்லாம் முடிய ஒரு பதினைந்து நிமிடங்கள் ஆகிவிடும்.

பிறகு நியூஸ் பேப்பர் எடுத்துக்கொண்டு ஒரு அரை மணி நேரம் வாசித்துவிட்டு குளிக்க செல்வேன்.  குளிக்கும் போது எனக்கு சுடுதண்ணி கண்டிப்பாக தேவை. இளஞ்சூட்டில் சோப்பு போட்டு குளித்து டவல் கட்டிக்கொண்டு வெளியில் வந்து கண்ணாடியில் என்னையே பார்த்து "போடா மாதவா... நீ ரொம்பத்தான் அழகு" என்று என்னையே பாராட்டிக்கொண்டு இன்று என்ன ட்ரஸ் போடலாம் என்று எண்ணி எனக்கு பிடித்த டீஷர்ட் எடுத்து போட்டதுமே, உள்ளேயிருந்து ஒரு சத்தம். "என்னங்க... இன்னிக்கு மண்டே. நோ டீஷர்ட்.  ஒன்லீ ஃபார்மல்ஸ்" என்று ஒரு வார்னிங் வந்ததை கேட்டு "என்ன லைஃப்டா மாதவா இது?  நமக்கு பிடித்த டிரஸ்ஸைகூட போட முடியாமல்" என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு இளம்பச்சையில் ஒரு ஷர்ட் எடுத்து போட்டுக்கொண்டு டக்-இன் செய்து வெளியில் வந்தால், அந்த குட்டி பிசாசு இருக்கே, அதாங்க அந்த பேய் பெத்ததுங்க... எம் பொண்ணு, "ராமராஜன் ரீஎன்ட்ரீ" என்று என் காதுபடவே சொல்லுதுங்க.  "மாதவா... எல்லாருக்கும் பொறாமைடா உன்ன பார்த்து" என்று மைண்ட் வாய்ஸ் சொல்றதை புரிந்து கொண்டு லேசாக எனக்குள் சிரித்துக்கொண்டேன்.

அடுத்து டிஃபன் சாப்பிட்டுவிட்டு ஆஃபிஸுக்கு கிளம்ப வேண்டியதுதான். என்னம்மா இன்னிக்கு டிஃபன் என்று கேட்டதற்கு "ஃப்ரிட்ஜில் ப்ரெட் இருக்கு எடுத்துக்குங்க" என்று பதில் வந்தது.   "ஏம்ப்பா அந்த இட்லி தோசைன்னெல்லாம் சொல்லுவாங்களே அதெல்லாம் உனக்கு தெரியாதா?" என்றால் "அதுக்கு பலகாரம் என்று சொல்லுவாங்க, அதானே?  அது விசேஷத்துக்கு செய்வது.  ஹீம்... நம்ம வீட்லேதான் எந்த எழவு விசேஷமும் நடப்பதில்லையே" என்று ஒரு பெருமூச்சு பதில் வந்தது.  "இதுக்கு மேலே எதாவது கேட்டால் இன்று நமக்குதான்டா மாதவா எழவு" என்று ப்ரெட் எடுத்து டமேட்டோ சாஸ் தடவிக்கொண்டிருந்த பதினைந்து செகண்டுக்குள் ஒரு ஆம்லெட்டோடு என் முன்னால் மனைவி ஆஜர்.  இதுதாங்க அவங்ககிட்டே எனக்கு பிடித்தது.  ஒரே நேரத்தில் மல்டிபிள் டாஸ்க்.  "தாங்க்ஸ்" என்று சொல்லி ஆம்லெட்டை பிரட்டுக்கு நடுவில் வைத்து வேகமாக சாப்பிட்டுவிட்டு ஷூ போடலாம் என்று பார்த்தால் அது பாலீஷ் இல்லாமல் "ங்கே" என்று என்னை பார்த்து இளித்தது.  சரி என்று வேகமாக ஷூவை பாலீஷ் போட்டுவிட்டு பார்த்தால் சாக்ஸை காணவில்லை.  மண்டே என்றாலே இதே அக்கப்போர்தான்.  "சாக்ஸ் எங்கேப்பா"ன்னு கேட்க வாய் திறக்கும் முன்பே "அதோ அங்கே டீபாயில் சாக்ஸ் இருக்கு எடுத்துக்கோங்க. அப்புறம் என்னையும் எங்கப்பாம்மாவையும் திட்டாதீங்க" என்று என் உள்மனதை அறிந்து ஒரு பதில் வந்தது.  "டேய் மாதவா... உன் பொண்டாட்டீ ரொம்ப நல்லவடா" என்று எனக்குள் கேட்கும் வாய்ஸ் உங்களுக்கும் கேட்குதா?

"ஓகே... அப்பா போய்ட்டு வரேன்டா" என்று பொண்ணுகிட்டே சொல்வது போல சொல்லிவிட்டு வைஃப பார்த்து "பாய்" என்று கண்ணாலேயே சொல்லிவிட்டு வெளியே வந்தால், தேவுடா! ரோடு பூரா டிரைனேஜ் பைப் லீக்காகி சாக்கடை தண்ணி.  எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணி, போய் பஸ் ஸ்டாப்லே நின்னா, ஒரு பஸ்ஸாவது ஸ்டாப்லே நின்னாதானே?  அதுக்குள்ளே ஏதோ ஆக்ஸிடெண்டாகி ஒரே ட்ராஃபிக் ஜாம்.  "என்னடா மாதவா... வாரத்தின் முதல் நாளிலேயே... அந்த மானேஜர் வேற... நாய் போல கத்துவானே" என்று மைண்ட்வாய்ஸ் சொல்ல, சரி ஆட்டோ புடிச்சு போய் சேருவோம் என்று ஒரு ஆட்டோவை நிறுத்தினால் "மீட்டருக்கு மேலே முப்பது ரூபா கொடு சார்" என்றவனை பார்த்து அப்படியே ஜகாவாங்கி பின்னாலே வந்த ஷேர் ஆட்டோவில் டிரைவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து ஆஃபீஸுக்கு பக்கத்திலிருந்த ஸ்டாப்பில் இறங்கி ஐம்பது ரூபாய் நோட்டை கொடுத்தேன். அதற்கு அந்த டிரைவர் "சார், பத்து ரூவா சேஞ்சா கொடு சார்" என்றவனை பார்த்து "சேஞ்ச் இல்லையேப்பா" என்று நான் சொல்ல, அவன் என்னை டாட்டாவுக்கும் பில்லாவுக்கும் பிறந்தேன் என்று ஏதேதோ தனக்குள் முணுமுணுத்தபடி மீதி சில்லரையை எனக்கு கொடுக்க, நான் ஆஃபீஸ் வாசலில் என்டர் ஆகும்போதே மானேஜர் கோபத்தில் கத்துவது கேட்டது. "மாதவா... இதெல்லாம் நமக்கு புதுசா?" என்று உள்மனம் சொல்ல, பென்னெடுத்து அட்டெண்டன்ஸில் கையெழுத்து போட்டு என் சீட்டில் அமர்ந்தேன்.

Friday 22 November 2013

ஏடீஎம் - கொள்ளை - கொலை முயற்சி

இரண்டு நிமிடங்களுக்குள் என்ன நடக்கிறது என்று அறிவுக்கு தெரிவதற்குள் எல்லாமே நடந்துவிட்டது.  ஒரு வங்கி அதிகாரி ஏடீஎம்-லிருந்து பணம் எடுக்கும்போது பின்னாலேயே வந்த ஒரு அயோக்கியன் அவரை தாக்கிவிட்டு சர்வசாதாரணமாக ரத்தத்தை துடைத்துவிட்டு எதுவுமே நடக்காதது மாதிரி மீண்டும் ஷட்டரை திறந்து வெளியேறி பின் மறுபடியும் வெளியிலிருந்து ஷட்டரை சாத்திவிட்டு செல்கிறான்.  இவையனைத்தும் அங்கு இருக்கும் காமெராவில் பதிவாகிறது.  ஆனாலும் அந்த பெண் அதிகாரியை காப்பாற்ற யாராலும் முடியவில்லை.





சம்பவம் நடந்து மூன்று மணி நேரத்திற்கு பிறகு ரத்தம் ஏடீஎம் அறைக்கு வெளியில் கசியும் போது பொதுமக்கள் சிலர் பதறி கதவை திறந்து பார்த்தால் ரத்த வெள்ளத்தில் ஒருவர்.  பின்னர் அவரை பல்வேறு மருத்துவமனைகளில் சேர்த்து இப்போது அதிக ரத்த இழப்பு ஏற்பட்டதாலும் தலையில் கத்தி காயத்தாலும் உடலின் ஒரு பகுதி செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவிக்கின்றனர். ஆனாலும் உயிருக்கு ஆபத்து இல்லையென்கின்றனர்.

இதுபோல சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஏதாவது நல்ல ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.

பெங்களூரு காவல் அதிகாரிகள் கூறுவது என்னவென்றால், கண்டிப்பாக அனைத்து ஏடீஎம்-களிலும் ஒரு காவலாளியை கண்டிப்பாக வங்கியினர் ஏற்பாடு செய்யவேண்டும் என்பது.
இதில் எனக்கு திருப்தி இல்லை.  ஏனெனில் இப்போதும் பல ஏடீஎம்-களில் காவலுக்கு இருப்பவர் அதிக பட்சம் பத்து மீட்டர்கூட ஓட முடியாத வயசானவராக இருப்பதுதான். அவரால் அவசரத்தில் அதிகமாக சத்தம்கூட செய்யமுடியாத ஒரு சொத்தல் நபரையே இந்த மாதிரி இடங்களில் வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.  அப்படி இருக்கும்போது இது மாதிரி சம்பவங்களை தடுப்பது அவரால் முடியாது.  அல்லது அந்த காவலாளியையே "கரெக்ட்" செய்துவிட்டாலும் போதுமே, இது மாதிரி சம்பவங்கள் நடந்துகொண்டேதானிருக்கும்.

நண்பர் ரஹீம் கஸாலி கூறுவதுபோல அனைத்து ஏடீஎம்-களின் காமெராவும் அதன் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்துடன் நேரடியாக இணைப்பது.
நண்பர் சௌந்தர் கூறுவதுபோல கண்டிப்பாக ஒருத்தருக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதிப்பது
நண்பர் கொக்கரக்கோ சௌம்யன் கூறுவதுபோல ஏடிஎம் செண்டர்களுக்கு இந்திய அளவிலோ அல்லது உலகத் தரத்திலோ தரச்சான்றிதழும் அனுபவமும் கொண்ட செக்யூரிடி நிறுவனங்களுக்கு மட்டுமே காவலர்களை நியமிக்க அனுமதியளிக்கும் உத்தரவை உடனடியாக ரிசர்வ் வங்கி போட வேண்டும்.
மேலும் ஏடீஎம் அறையில் ஒரு சென்ஸார் வைத்து அதில் சாதாரண டெசிபலுக்கு அதிகமாக ஓசை ஏற்பட்டால் உடனே அபாய சங்கு தானாகவே ஊதுவது.
உதாரணத்துக்கு "ஐயோ காப்பாத்துங்கள்.... காப்பாத்துங்கள்" என்பது நிச்சயமாக அதிக சப்ததத்தில் கூறப்படும்.  அல்லது "ஏய் பணத்தை எடு" என்று அதட்டுவதும் அதிக டெசிபலில்தான் இருக்கும்.
ஏடீஎம்-மின் தரையிலும் ஒரு அதிர்வுக்கான சென்ஸாரை பொருத்துவது.  இதன் மூலம் யாராவாது திடீரென்று தாக்கப்பட்டு கீழே விழும்போது அந்த அதிர்வினால் அபாய ஒலியை ஏற்படுத்துவது.
இப்படி அபாய சங்கு ஊதப்படும்போது ஏடீஎம்-ன் கதவு தானாகவே automatic lock ஆகிவிடுவது போன்ற ஏதாவது ஒன்றை ஏற்பாடு செய்யப்படவேண்டும்.

நண்பர்களே வேறு ஏதாவது ஆலோசனைகள்....

சரி, இந்த அயோக்கியர்களுக்கு எந்தவிதமான தண்டனையை வழங்கலாம்...


அல்லது வேறு ஏதாவது இருப்பினும் பகிருங்களேன்!

டிஸ்கி: திருப்பூர் ஜோதிஜி அவர்கள் 

தலைவரே ஆலோசனை என்பதை விட இதற்கு தீர்வு சொல்லுங்க.

ஐஓபி வங்கியில் அருகே உள்ள அவர்களின் ஏடிஎம்  எப்போதும்திறந்தே இருக்கும். இருக்கின்றது.  பல சமயம் நாய் உள்ளே படுத்து கிடக்கின்றது.  குப்பையும் கூளமும். துர்நாற்றம் சகிகிக்காது. வங்கியில் சென்று இதற்கு யார் பொறுப்பு என்று கண்டுபிடிக்கவே மூன்று நாள் ஆனது.  விடாது கண்டுபிடித்து அவரிடம் கேட்க தனியார் நிர்வாகம் தான் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.  சொல்லியிருக்கின்றோம்.  இனிமேல் வருவார்கள் என்றார்.

அரசு சார்ந்த வங்கியின் நிலமை இது.

தனியார் வங்கிகளில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள்.  பெரும்பாலும் தலையை சொறித்து டீ குடிக்க ஏதாவது கொடுங்க தம்பி என்கிறார்கள்.

ஆனால் தனியார் வங்கியில் கால் அலர்ட் என்கிற ரீதியில் குறுஞ்செய்தி வருவதற்கும் காசு பிடிக்கின்றார்கள்.

கொள்ளைக்கூட்டத்தில் நீங்கள் சொன்ன கொள்ளையடித்தவன் , கொலை செய்பவன் நல்லவனா? கெட்டவனா?

என்று கேட்பதற்கும் பதிலளியுங்களேன்!

Friday 1 November 2013

தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

Aceh Darusalam

படைப்புகளில் மிகச்சிறந்தது மனிதப்படைப்பு
ஏனெனில்
அவனே தீமைகளை தடுத்து நன்மைகளை ஏவக்கூடியவன்!


இந்தத் தீபத்திருநாளும் தீமைகளை கொன்று 
நன்மைகளை நிலைநாட்டுவதை எடுத்துக்கூறுகிறது!


இந்த தீபத்திருநாளில் தொலைந்த மனிதத்தை
மீட்டெடுப்போம், வாருங்கள்!

Preview Image

Thursday 31 October 2013

இஸ்லாம் - வாள் முனையில்!

இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டது என்று சொல்லும் சகோதர சகோதரிகளே விளக்கம்  இதோ .....

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டிருக்காமல் இருந்தால் - உலகம் முழுவதிலும் இஸ்லாத்திற்கு ஆதரவாக இத்தனை கோடிக்கணக்கானவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பது சில மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல.
மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம்.
இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

1. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்
இஸ்லாம் என்ற வார்த்தை 'ஸலாம்' என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. 'ஸலாம்' என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவருடைய விருப்பம் அனைத்தையும் இறைவனுக்காகவே விரும்புவது என்ற மற்றொரு பொருளும் உண்டு. இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் என்பது அமைதியான மார்க்கமாகும்.

2. சில வேளைகளில் அமைதியை நிலைநாட்ட நிர்ப்பந்தம் அவசியமாகிறது.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அமைதியையும் - இணக்கத்தையும் நடைமுறைப் படுத்த ஆதாரவாக இருப்பதில்லை. உலகில் உள்ளவர்களில் சிலர் தங்களது சுயலாபம் கருதி - குழப்பம் விளைவிப்பதையே விரும்புகின்றனர். இது போன்ற வேளைகளில் - உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவேதான் அமைதியை நிலைநாட்டவும் - சமுதாய எதிரிகளை அடக்கவும் - குற்றவாளிகளை தண்டிக்கவும் காவல்துறை என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ளது. இஸ்லாம் அமைதியை விரும்பும் அதே வேளையில் எங்கெல்லாம் அநியாயம் நடக்கின்றதோ - அந்த அநியாயங்களை எதிர்த்து இஸ்லாமியர்களை போராட வலியுறுத்துகிறது. அநியாயத்தை எதிர்த்து போராட வேண்டிய நேரங்களில் - நிர்ப்பந்தம் அவசியமாகிறது. அமைதியையும் - நீதியையும் நிலை நாட்ட மாத்திரமே நிர்ப்பந்திக்கலாம் என இஸ்லாமிய மார்க்கம் அனுமதியளிக்கிறது.
3. வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி (De Lacy O'Leary)  யின் கருத்து.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்பது தவறான கருத்து என்பதை நீரூபிக்க -பிரபல வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி (De Lacy O'Leary)  எழுதிய 'இஸ்லாம் கடந்து வந்த பாதை'  (Islam At The Cross Road) என்ற புத்தகத்தின் 8வது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.
'இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கருத்து மீண்டும் - மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப் பட்டுக் கொண்டிருப்பது - வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டக் கட்டுக்கதையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை தெளிவான வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.'

4. ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி 800 ஆண்டுகளாக இருந்தது.
ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளாக அரசாட்சி செய்தனர். ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் எவரும் - ஸ்பெயின் நாட்டில் உள்ள மாற்று மதத்தவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறச் சொல்லி வாள் கொண்டு நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால் பின்னால் வந்த கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர் என்ற பெயரில் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தனர். இன்றைக்கு ஸ்பெயினில் இறைவனை தொழுவதற்கு அழைக்கவென ஒரு முஸ்லிம் கூட இல்லை.
5. அரேபியர்களில் 1 கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians)
கடந்த 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்கள் ஆண்டு வருகின்றனர். இடையில் சில ஆண்டுகள் - பிரிட்டிஷ்காரர்களும் - சில ஆண்டுகள் பிரெஞ்சுகாரர்களும் அரபு தீபகற்பத்தை ஆண்டனர். ஆனால் மொத்;தத்தில் 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்களே ஆட்சி செய்து வருகின்றார்கள். இருப்பினும் - இன்று கூட - 1கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians) இஸ்லாமியர்கள் வாளைக் கொண்டு நிர்ப்பந்தித்து இருந்தால் - இன்றைக்கு அரபு தீபகற்பத்தில் ஒருவர் கூட கிறிஸ்துவராக இருக்க மாட்டார். அனைவரும் முஸ்லிம்காகத்தான் இருந்திருப்பர்.

6. இந்திய மக்கள் தொகையில் எண்பது சதவீத மக்கள் முஸ்லிம் அல்லாதோர்களே!.
இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியிருந்தால் - முஸ்லிம் அல்லாதோர்களை - தங்களது ஆட்சி பலம் மற்றும் படை பலம் கொண்டு இஸ்லாமியர்களாக மாற்றியிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகையில் எண்பது சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர்கள்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் ண்பது சதவீத முஸ்லிம் அல்லாதோர்களே - இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல என்பதற்கு சாட்சிகளாவர்.

7. இந்தோனேஷியாவும் - மலேசியாவும்.
இன்றைக்கு உலகில் உள்ள நாடுகளில் இந்தோனேஷியாவும் - மலேசியாவும்தான் அதிகமான முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள். எந்த இஸ்லாமிய படைகள் இந்தோனேஷியாவிற்கும் - மலேசியாவுக்கும் சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

8. ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள்
அதே போன்று ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் இஸ்லாம் துரிதமாக பரவி இருக்கிறது. எந்த இஸ்லாமிய படைகள் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளுக்கு சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?

9. இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.
எந்த வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது?. அப்படி ஒரு வாள் இருந்தாலும் - இஸ்லாத்தை பரப்புவதற்காக அந்த வாளை இஸ்லாமியர்கள் பயன் படுத்தியிருக்கமுடியாது. ஏனெனில் கீழ்க்காணும் அருள்மறை குர்ஆனின் வசனம் அதனை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது.

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமும் இல்லை: வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. (அல்-குர்ஆன் 02வது அத்தியாயம் - 256வது வசனம்)

10. அறிவார்ந்த கொள்கை என்னும் வாள்:
அறிவார்ந்த கொள்கை என்பதுதான் அந்த வாள். மனிதர்களின் எண்ணங்களையும் - உள்ளங்களையும் கொள்ளை கொண்டது அறிவார்ந்த கொள்கை என்ற அந்த வாள். அருள்மறை குர்ஆனின் 16வது அத்தியாயத்தின் 125வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது.

'(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!. அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் நீர் தர்க்கிப்பீராக!. மெய்யாக உம் இறைவன் அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.'

11. 1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டுவரை கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக மதங்களின் வளர்ச்சி.கடந்த ஐம்பது ஆண்டுகளில் (1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை) உலகில் உள்ள முக்கிய மதங்களின் வளர்ச்சி பற்றிய புள்ளிவிபத்தை 1986 ஆம் ஆண்டு ர்Pடர்ஸ் டைஜஸ்ட் பத்திக்கையின் ஆண்டு மலரான 'அல்மனாக்' பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. மேற்படி புள்ளிவிபரத்தை உள்ளடக்கிய கட்டுரை 'தி ப்ளெய்ன் டிரத்' என்ற ஆங்கில பத்திரிக்கையிலும் வெளியாகியிருந்தது. உலக மதங்களில் அதிகமான வளர்ச்சி அடைந்து முதலிடத்தை பிடித்திருப்பது இஸ்லாமிய மார்க்கமே. அதனுடைய வளர்ச்சி கடந்த 50 ஆண்டுகளில் 235 சதவீதமாக இருந்தது. கிறிஸ்துவ மார்க்கம் 47 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது. லட்சக் கணக்கானவர்களை இஸ்லாத்தில் மாற்ற வேண்டி இந்த நூற்றாண்டில் எந்த போர் நடந்தது?.

12. அமெரிக்காவிலும் - ஐரோப்பாவிலும் இஸ்லாமிய மார்க்கம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது:
இன்று அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். அதே போல் ஐரோப்பாவிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். எந்த வாள் மேற்கத்தியர்களை நிர்ப்பந்தப்படுத்தி மிக அதிக அளவில் இஸ்லாத்தில் இணையச் செய்தது?.

13. டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன்
'ஒருநாள் அரபுலகத்தின் கையில் அணுஆயுதம் சென்றுச் சேரும் என்று கவலைப்படுபவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபகத்தில் பிறந்த அன்றே இஸ்லாம் என்ற அணுகுண்டு இந்த உலகத்தில் போடப்பட்டாகி விட்டது என்பதை உணரத் தவறிவிட்டார்கள்.' என்று டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன் சரியாகத்தான் சொன்னார்.
நன்றி”ஒற்றுமை.நெட்

Thursday 8 August 2013

ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்




பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

Saturday 3 August 2013

’வணக்கம்’ என்றால் காத தூரம் ஓடுவீர்கள்!!!

வணக்கம் நண்பர்களே!
இப்பதிவு திரு சாம் ஜார்ஜ் அவர்களுக்கான பதில் பதிவு.
முதலில் இங்கு சுட்டி அந்த பதிவை படித்துவிட்டு இதை வாசிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.  இப்பதிவை திரு ஜோதிஜி அவர்கள் ப்ளஸ்-ல் பகிர்ந்ததால் நான் படிக்க நேர்ந்தது.

படித்துவிட்டீர்களா?
சரி.  இனி அவரின் சில சந்தேகங்களுக்கு எனக்கு தெரிந்தவற்றிலிருந்து தெளிவு ஏற்படுத்த முயற்சிதான் இந்த பதிவு.

திரு தருமி ஐயா அவர்களுக்கு மீண்டும் என்னுடைய பணிவான வணக்கங்கள்.
social harmony நிகழ்வில் நடந்தை குறிப்பிடும் போது  ஒரு குழுவில் "....இந்து மதத்தைப்பற்றிய ஒரு கருத்து அவர் வாசிக்கும் போது விவாதத்திற்குள்ளானது ...." என்றும் மற்றொரு குழுவில் "....இஸ்லாமியர்கள் பாகிஸ்தானும் இந்தியாவும் கிரிக்கெட் ஆடினால் பாகிஸ்தான் வெல்ல ஆசைப்படுவார்கள்..." என்று சொல்கிறீர்களே, இந்து மதத்தை பற்றிய கருத்தை வெளியிடாமல் "ஒரு கருத்து" என்பதோடு முடித்துக் கொண்டீர்களே அந்த ஒரு கருத்து அச்சில் ஏற்றக்கூட கூசக்கூடியதோ ஐயா?

ஃபத்வா:
ஃபத்வா என்பது மார்க்க அறிஞரால் வழங்கப்படும் தீர்ப்பாகும்.  தீர்ப்பு என்றவுடன் நன்றாக புரியும் ஒவ்வொரு அறிஞரும் தன் அறிவுக்கு ஏற்ப கொடுப்பது என்று.  ஒரு ஃபத்வா வந்தவுடன் உலகமே இருண்டுவிட்ட மாதிரி இருக்கிறது சல்மான் ருஷ்டி மற்றும் தஸ்லிமா போன்றவர்களுக்கு.  ஐயா நீங்கள் ஒரு விஷயத்தை மறந்துவிட்டீர்கள்.  அக்பர் தீனே இலாஹி என்ற புதிய மதத்தை இயற்றினார்.  ஷீர்டி சாய்பாபாவை இன்றும் கடவுளாக ஏற்கும் மக்கள் இருக்கின்றனர்.  மெய்வழிச்சாலையில் காதர் பாட்சா ராவுத்தரை அறிய சிவகாசிக்காரனை சுட்டி அறிந்துகொண்டீர்களானால் ஃபத்வா என்பது வெறும் பாவ்லா பண்ணவே பயன்படுகிறது என்பதை நன்றாக அறிந்து கொள்வீர்கள்.  மேலும் ஷாபானு எனும் காவல்துறை ஏட்டின் மகளின் வழக்கையும் அறிந்திருப்பீர்கள்.  இவையெல்லாம் கூற காரணம் ஃபத்வாவுக்கும் உண்மைக்கும் நம் நாட்டில் சம்பந்தமே இல்லை என்பதே! அவர்களுக்கு தங்களைப்பற்றிய ஒரு விளம்பரம்.  நம் அரசியல்வாதிகளுக்கு அதுவொரு ஓட்டு வியாபாரம். அவ்வளவே.

இந்த ஃபத்வா எனும் "தன் அறிஞர்" கூறும் தீர்ப்பை பிடித்து தொங்கும் பழக்கம் அனைத்து அரசியல்/மதங்களிலும் உள்ளது.  சமீபத்திய உதாரணம், இளவரசன் மற்றும் அவரைச்சார்ந்தவர்களின் மரணங்கள்.  சில நாட்களுக்கு முன் பால் தாக்ரேயின் மரணத்தை பற்றி கருத்து கூறிய ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவமானம்.  அது போல ஜெயலலிதாவின் வழக்கில் தீர்ப்பு சொன்னவுடன் கல்லூரி மாணவிகள் பேருந்தோடு தீயிட்டு கொளுத்தப்பட்டதும், ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும் தமிழர்களும் திமுகவும் தாக்கப்பட்டதும், இந்திரா காந்தி கொல்லப்பட்டதும் சீக்கிய இனத்தையே அழிக்க முயற்சித்ததும் இதுபோல ஃபத்வா எனும் தீர்ப்பு சொல்பவர்களால்தானே ஐயா?
டாவின்சி கோட்-க்கு நடந்ததும் இந்த மாதிரி ஃபத்வாதானே ஐயா?

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.  நான் ஃபத்வாவை சரியென்றோ தவறென்றோ இங்கு வாதாடவில்லை.  இந்த ஃபத்வாவை அனைத்து நம்பிக்கையாளர்களும் (அரசியல்/மதம்) கையில் எடுத்துக்கொண்டு நர்த்தனம் ஆடுகின்றனர் என்பதே! அது இஸ்லாமியர்களின் ஏகபோக உரிமைபோல நீங்கள் கூறுவதை மறுப்பதேயாகும்.

பர்க்கா:
பர்க்கா என்பதும் ஏதோ இஸ்லாமியர்களின் ஏகபோக பெண்ணியக்கத்தின் ஆணிவேரையே அசைத்துப்போடும் ஒரு இரும்புக்கவசம் போல சித்தரித்துள்ளீர்கள்.  மதர் தெரஸா அணிந்து கொண்டதும் இந்த பர்க்காதானே ஐயா?  என்ன ஒரு வித்தியாசம் என்றால் மதர் கருப்பு வண்ணத்தில் அணிவதில்லை.  அவ்வளவே!  அதுமட்டுமல்ல.  நம் இந்தியக்கலாச்சாரத்தில் பெண்கள் முக்காடு போட்டுக்கொள்ளும் பழக்கம் இருப்பதை கண்டதில்லையா?  பிறகு ஏன் பர்க்காவை இழுத்து இஸ்லாத்துடன் கட்டுகிறீர்கள்?


வண்ணம்தான் உங்களுக்கு பிரச்சனையென்றால் இந்த மாதிரி பர்க்கா ஓக்கேவா என்று தெரியப்படுத்தவும் ஐயா!

இப்போது உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்:
கேள்வி 1.  உங்கள் மதத்திலிருந்து யாரேனும் வெளியே வரமுடியுமா? வந்தால் ஏன் உங்கள் மதமும் நீங்களும் தடை செய்கிறீர்கள்?

நடிகை சுரையா தேவ் ஆனந்த் எனும் நடிகரை திருமணம் செய்தது
நடிகை குஷ்பு சுந்தரை திருமணம் செய்தது
நவாப் ஆஃப் பட்டோடி மன்சூர் அலி கான் ஷர்மிளா தாகூரை திருமணம் செய்தது
பிறகு ஆமீர்கான் ஷாருக்கான் ஆகியோரின் திருமணங்கள் மேலும் சல்மான்கான் தன்வீட்டில் கணேஷ் பூஜையை விமரிசையாக கொண்டாடுவது எல்லாம் எதை காட்டுகிறது?
மேலும் திருமதி இந்திரா காந்தி முஸ்லீமாக மதமாறித்தான் ஃபேரோஸ் ஜஹாங்கீரை திருமணம் செய்தது பின்னர் தன் மதத்திற்கே மாறியது எல்லாம். மேலும் இப்போது ஆஃப்கானிஸ்தானில் கிறிஸ்துவர்கள் யாரை மதமாற்றுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?  அங்குள்ள முஸ்லீம்களைத்தானே?
எனவே இஸ்லாத்திலிருந்து யார் வேண்டுமானாலும் வெளியே வர முடியும் அப்படி வெளியே வருபவர்கள் எந்த தடையும் இன்றி வாழ்கின்றனர் என்பதற்கு மேலும் ஒரு சான்று கீழே உள்ள படம் ஐயா.

கேள்வி 2. எந்த ஒரு கேள்வியையும் மதத்தில் எழுப்பக்கூடாதா? ஏன் இந்த பயம்? அல்லாவை காப்பாற்றவா? இஸ்லாமை காப்பாற்றவா?
கண்டிப்பாக கேள்விகள் கேட்கலாம்.  பதில் பெறலாம்.  தெளிவடையலாம். பின்னரே மார்க்கம்.  ஆப்ரகாமுக்கு (இப்ராஹீம் அலை) படைத்தவன் யார் என்று கேள்வி பிறந்ததால்தான் அவர் தெளிவு பெற்றார்.  ஓரிறைவனை அவர் அறிந்தார்.
சந்தேகம் என்பதற்கும் விதண்டாவாதம் என்பதற்கும் வித்தியாசம் உள்ளதுதானே ஐயா?  எனவே கேள்வியின் நோக்கம் உண்மையெனில் விளக்கம் நிச்சயம் பெறமுடியும்.
பிறகு, அல்லாவை காப்பாற்றவேண்டிய அவசியம் யருக்கும் இல்லை. ஏனெனில் கடவுள் என்ற வார்த்தைக்கு அரபி மொழியில் வார்த்தை அல்லாஹ்.  அவ்வளவே!  அதேபோல இஸ்லாமை காப்பாற்ற வேண்டிய தேவையும் ஏற்படவில்லை என்றே எண்ணுகிறேன்.  இதெல்லாம் வெரும் பிரம்மை. அவ்வளவே!

கேள்வி 3. உங்கள் தீவிரவாதம் ஏன் உங்கள் மதத்தினர் மீதும் இப்படிப் பாய்கிறது?
எல்லாம் நல்லாதானே போய்க்கொண்டிருந்தது.  ஏன் திடீரென்று தீவிரவாதம் என்று மாறியது?  இப்போ நம் நிலை எப்படி ஆகிவிட்டது என்றால் எனக்கு தெரிந்தவன் தவறிழைத்தால் அது தவறல்ல என்பது போல.  அதனால்தான் இந்த கேள்வியே.  தவறு யார் செய்தாலும் அது தவறுதான் என்று இஸ்லாம் கூறுவதையா தவறு என்கிறீர்கள்.  என்னிடம் இதற்கு பதிலில்லை.

கடைசியாக, பொங்கல் என்பது உழவர் திருவிழா.  அது எனக்கு தெரிந்து அனைத்து விவசாயிகளும் கொண்டாடுகின்றனர்.  நானும் அதில் பங்கெடுத்துள்ளேன். (நான் விவசாயி அல்ல)  என்ன ஒன்று சூரிய பகவான் எனும் கான்செப்ட்-ஐ வணங்குவதில்லை.  அவ்வளவே.  அது தவிர பொங்கல் வைப்பதிலிருந்து மாட்டுப் பொங்கல் வரை, ஏன் ஜல்லிக்கட்டில் பங்கெடுப்பதுவரை எல்லோருமே சேர்ந்துதான் செய்கின்றனர்.

கட்டக்கடசியாக, "தாய் மண்ணே வணக்கம்" என்று தொண்டை தண்ணி காயிற மாதிரி நம்ம ரஹமான் தம்பி கத்தியதற்கு பின்னாலும் இப்படி ஒரு அபாண்டத்தை சொன்னால் என்னிடம் ஏது பதில்!!

social harmony பேசுகின்றோம் என்று கூறி ஒன்றும் அறியாத குழந்தைகளின் மனதில் வெறுப்பு எனும் தீயை மூட்டாதீர்கள் என்று கூறி அனைவரும் இதை பொறுமையாக வாசித்தமைக்காக நன்றிகளையும் வணக்கங்களையும் கூறிக்கொள்கிறேன்.

Wednesday 10 July 2013

அமைதிக்கு பெயர்தான் "சாந்தி"!

அமைதி!
இதைதான் இன்று அனைவரும் தேடிக்கொண்டிருக்கின்றனர்.
தனி மனிதன் முதல் சமூகம் வரை, தெரு முதல் நாடுவரை, உலகின் அனைத்தும் இந்த அமைதியைத் தேடித்தான் அலைந்துகொண்டிருக்கின்றன. அமைதியை நிலைநாட்டுகின்றோம் என்று மார்தட்டிக்கொள்பவர்கள் செய்வது யாவும் கலவரங்களும் மோதல்களுமே!

உலக நாடுகளில் அமைதி, மனித உரிமைகள், அணு ஆயுதத்தடுப்பு என்று வாய் கிழிய  பேசக்கூடிய நாடுகள்தான் உலக அளவில் ஆயுத விற்பனை செய்வதில் முதலிடத்தில்   உள்ளன.     அடுத்தவரின்  அமைதியைக்  கெடுப்பவர்கள்,   தாம் மட்டும்   அமைதியாக   இருக்க வேண்டும்   என   விரும்புகின்றனர்.     ஏன் இந்த முரண்பாடு?  

மனித சமூகம் விரும்பிய அமைதி கிடைத்ததா?
இன்று பெருகிவிட்ட தற்கொலைகளுக்கும் மனநோய்களுக்கும் முக்கிய காரணம் இந்த அமைதியின்மையேதான்.  மனநோய்களும் தற்கொலைகளும்  மட்டுமல்ல, உடல் நோய்களும் கொலை கொள்ளைகளும் ஏற்பட இந்த அமைதியின்மையே கா'ரணமாக' உள்ளது.  இன்று திருமண முறிவுகள் சாதாரணமாகிவிட்டன.  குழந்தைகளிடம் வன்முறை என்பது அதிகரித்துவிட்டது.  முதியோர் இல்லங்கள் தெருக்கு தெரு முளைத்துக்கொண்டிருக்கின்றன.

 “எவர் குருதியும் சிவப்பு தான்,  எவர் கண்ணீரும் உப்பு தான்” என்று அமைதியை பரப்பிய புத்தனின் வீட்டிலும் இன்று வெடிகுண்டுகள் வெடிக்கின்றன.
இந்தியாவில் அமைதியைக் குலைப்பதில் முன்னணியில் இருப்பது வகுப்புக் கலவரங்கள்தான்.  ஜாதி மதத்தின் பேரால் நமது நாட்டைப் போன்று உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இத்தனைக் கலவரங்கள் நிகழ்வதில்லை.   அணுகுண்டுகள், இரசாயன ஆயுதங்கள், நோய்களை பரப்பும் உயிரி ஆயுதங்கள் (biological weapons) ஆகியவற்றை வாங்க போட்டியிடும் நாடுகள் மற்றும் அவற்றை தயாரிக்கும் நாடுகளும் கூறிக்கொள்வது "அமைதிக்காகவே நாம் இவற்றை செய்கிறோம்". என்ன ஒரு முரண்பாடு?
இதுபோல இன்று தனிமனிதனும் வீடும் நாடும் "மெத்தை வாங்கி தூக்கத்தை இழந்து" அமைதியற்று தவிக்கின்றனர்.  இந்த அமைதியை பெற பிரார்த்தனை, யாகம், வேள்வி, தியானம், யோகா போன்ற வழிகளில் அமைதியைக் காண முயல்கின்றான்.  உலகப்பற்றை ஒழித்து தனிமையில் தவம் புரிந்தால் அமைதி கிட்டும் என்பது சிலருடைய நம்பிக்கை!  இயற்கை எழில் சூழ்ந்த அமைதியான ஆரவாரமற்ற இடங்களுக்குச் சென்று அமைதி பெறத் துடிக்கிறான்.   ‘வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்ற பழமொழிக்கேற்ப நகைச்சுவை மன்றங்களுக்கும் அமைதி நாடிச் செல்பவர் இருக்கின்றனர்.   இசை, ஆடல், பாடல் இவற்றில் லயித்து அமைதி பெற எண்ணுபவர் பலர்.  அமைதிக்காக போதை மருந்து(?) பயன்படுத்துபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் அமைதி ஒன்றும் அப்படி எளிதில் கிடைத்து விடுவதில்லையே! ஒருவேளை கிடைத்துவிட்டாலும் அது தற்காலிகமானதே!
அமைதியை தனிமனித அமைதி, சமூக அமைதி, இறைவனுடன் பெறும் அமைதி எனப் பிரிக்கலாம். இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை; அமைதியற்ற மனிதன் அமைதியற்ற சமூகத்தை உருவாக்குகிறான்; அமைதியற்ற சமூகம் அமைதியற்ற மனிதனை உருவாக்குகிறது.  பேராசை, பொறாமை, புகழ் வெறி, பதவி வெறி, ஆதிக்க உணர்வு உள்ள மனிதர்கள் தங்களது அமைதியையும் இழந்து விடுவதோடு சமூகத்தின் அமைதியையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். பதவி வெறி பிடித்த அரசியல்வாதியால் நாட்டின் அமைதி எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.    வறுமை, சாதி மத வெறி, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை முதலிய கொடுமைகள் நிரம்பிய சமூகம் அமைதியற்ற மனிதனை உருவாக்குகிறது. சமூகம் தீமைகளால் சூழப்பட்டிருக்கின்ற போது அதில் வாழும் மனிதன் மட்டும் எப்படி அமைதியாக வாழ முடியும்?
சாதி வேண்டாம் என்று தனிமனிதன் கூறினாலும் சாதி அமைப்பிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை. சாதியை அவன் விட்டாலும் சாதி அவனை விடுவதாக இல்லை. சாதியைப் பொருட்படுத்தாது அவன் திருமணம் செய்ய விரும்பினால் சமூகம் அவன் மீது சாதியைத் திணிக்கிறது.
இலஞ்சம் வாங்குவதை ஒருவன் வெறுத்தாலும் இலஞ்சம் கொடுத்தே ஆக வேண்டிய நிலைமையில் இருக்கிறான்.
ஆபாசத்தை வெறுப்பவர்களும் ஆபாசமே ‘வாழ்க்கை முறை’ என்றாகி விட்ட சமூகத்தின் பாதிப்பிலிருந்து தப்ப முடியவில்லை.
எனவே அமைதியை உருவாக்க விரும்புபவர்கள் இவ்விருவகை அமைதியின்மை பற்றியும் சிந்திக்க வேண்டும். பொதுவாக சமயவாதிகள் அல்லது ஆன்மீகவாதிகள் தனிமனித அமைதி பற்றி மட்டுமே பேசுவார்கள். அவர்கள் தரும் தீர்வுகள் பிரார்த்தனை, வழிபாடு, தியானம் என்ற அளவிலேயே அமைந்திருக்கும். ஆனால் சமயச்சார்பற்ற கொள்கையுடையவர்கள் சமூக, அறிவியல், பொருளாதார விஷயங்களைப் பற்றியே அதிகம் பேசுவார்கள். தனிமனித ஒழுக்கம், அமைதி, சீர்திருத்தம் ஆகியவை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். தனிமனிதனும், சமூகமும் அமைதி பெறும் போதுதான் உண்மையான, முழுமையான அமைதி மலர முடியும்.
அமைதிக்கான வழிகளைக் காட்டுவதற்காகவே மனிதர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தன் தூதர்களாக நியமித்து, அவர்கள் வாயிலாக அமைதிக்கான அனைத்து வழிகாட்டுதல்களையும் இறைவன் வழங்கினான். இத்தூதர்கள் இறைக்கோட்பாடுகளை மக்களுக்கு விளக்கியதோடு அமைதியை நிலை நாட்டும் பணியிலும் ஈடுபட்டனர். முதல் மனிதராகிய ஆதம் (அலை) முதல் இறைத்தூதர் ஆவார். அவரைத் தொடர்ந்து தூதர்கள் பலரை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இறைவன் நியமித்தான். அந்த வகையில் இறுதியாகப் பணியாற்றியவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களாவார்.
இறைவனின் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தும் சமுதாயமே அமைதி பெறும். இஸ்லாம் என்ற சொல்லுக்கு அமைதி, சமாதானம், சாந்தி, கீழ்ப்படிதல் என பல பொருள் உண்டு. இறைவனின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்தால் அமைதி கிட்டும். இறைவழிகாட்டுதலை மீறினால் அமைதி மறுக்கப்படும் என்பதே அச்சொல் நமக்கு உணர்த்தும் பாடமாகும்.
 ‘சாந்தி உண்டாகும் (இறைவனின்) நேர்வழியைப் பின்பற்றி நடப்போருக்கு’ (குர் ஆன் 20 : 47) எனும் இறைவசனமும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது.
 மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண் பெண்ணின் வழித்தோன்றல்கள். ஒரே ஆன்மாவிலிருந்து பிறந்தவர்கள். எனவே அனைவரும் சகோதரர்கள் எனும் இறைக்கருத்தை மறுத்து மனிதர்களை நாம் பல வர்ணங்களாகப் பிரித்தோம். அதன் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்தோம். விளைவு சாதி இன மோதல்கள் !
 மதுவை தீமைகளின் பிறப்பிடம் என்கிறது இறைக்கோட்பாடு ! அதனை வருமானங்களின் பிறப்பிடம் எனக்கருதி அதனைத் திறந்துவிட்டோம். விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
வட்டி ஒரு சுரண்டல்; ஒரு கொடுமை என்ற இறைக்கோட்பாட்டை ஏற்க மறுத்து வட்டியின்றி பொருளியலே இயங்க முடியாது என்ற நிலையை உருவாக்கினோம். பணவீக்கம், விலைவாசி உயர்வு, ஏழைகளும், ஏழை நாடுகளும் சுரண்டப்படுதல், அடிமைப்படுத்தப்படுதல் போன்ற பல கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றோம் !
‘மானக்கேடானவற்றிற்கு அருகில் கூட நெருங்காதீர்கள்’ என்ற இறைக் கோட்பாட்டை மீறியதால் ஏற்பட்ட விளைவுகள் விபச்சாரமும், கருக்கலைப்பு, பால்வினை நோய்கள், எய்ட்ஸ்…!
இப்படி வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் இறைச்சட்டங்களை மீறிய போதெல்லாம் மனித சமூகம் அமைதியை இழந்து விடுகின்றது. எனவே அமைதியைப் பெறுவதற்கான ஒரே வழி –
  “படைத்தவனின் பக்கம் திரும்புவதே !” (திருக்குர்ஆன் 94 :8)
  “இறைவனின் பக்கம் விரைந்து வருவதே !” (திருக்குர்ஆன் 51 :50)
இதோ "அவன்" பக்கம் திரும்ப ஒரு முழு மாதம் வந்துள்ளது.  இந்த ரம்ஜான் மாதம் முழுவதும் பகலில் உண்ணாமலும் பருகாமலும் இருந்து நம்மை "அவன்" நாடியபடி மாற்றிக்கொள்ள ஒரு அருமையான சந்தர்ப்பம்.  இந்த மாதம் ஒருவனுக்கு கிடைத்து அதனைக்கொண்டு தன்னுடைய பாவங்களை விட்டு நீங்காதவன் நிச்சயமாக கைச்சேதாரம் அடைந்தவனாவான்!

வாருங்கள்! நம் அனைவர்மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
அமைதிக்குப் பெயர்தான் சாந்தி எனும் இஸ்லாம்!