Wednesday 25 December 2013

எலெக்ஷன் வருதுங்கோ - 1

ஆல்ரெடி பாஜக-வினர் வல்லபாய் படேலுக்கு சிலை வைக்க நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இப்போது காங்கிரஸ், ஷத்ரப்தி சிவாஜிக்கும் சட்டமாமேதை அம்பேத்கருக்கும் மகாராஷ்டிராவில் சிலை அமைக்க முயன்றுகொண்டிருக்கிறது.

சிலை வைப்பது ஒரு ட்ரெண்ட் என்றால் இன்னொரு டிரெண்ட் சிறுபான்மை மதத்தினரை குளிரவைப்பது.  நேற்று க்றிஸ்மஸ்ஸை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும்போது பல அறிய தகவல்களை அறிய முடிந்தது.

இத்தாலி நாட்டில் இருந்து வந்து தமிழ்த்துறவியாக வாழ்ந்து, "தத்துவ போதகர்" எனத் தம் பெயரையே மாற்றிக்கொண்டு தமிழ் மொழியின் உரைநடைக்கு உயிர் தந்த இராபர்ட் டி நொபிலி! அதே இத்தாலியில் இருந்து வந்து கிருத்தவத் தொண்டுகளுடன் ஏசுநாதரின் வரலாறு கூறும், "தேம்பாவணி" தமிழுக்கு அகராதிக் கலையை அறிமுகப்படுத்திய, "சதுரகராதி" உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் படைத்த வீரமாமுனிவர்!
செர்மானிய நாட்டிலிருந்து வந்து தரங்கம்பாடியில் முதன்முதல் அச்சுக்கூடத்தையும், பொறையாற்றில் காகித ஆலையையும் நிறுவி "தமிழ் – இலத்தீன் அகராதி", "பைபிள்" தமிழ் மொழிபெயர்ப்பு முதலான நூல்களையும் படைத்த சீகன் பால்க் அய்யர்!
இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்து சமயப் பணிகள் ஆற்றியதுடன், "திருக்குறள்", "திருவாசகம்", "நாலடியார்" ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு; தம் தாயகம் திரும்பிய பின் வெளியுலகுக்குத் தமிழின் மேன்மையைப் புலப்படுத்தி, "நான் ஒரு தமிழ்மாணவன்" எனத் தம் கல்லறையில் எழுதச் செய்த ஜி.யு.போப்!
அயர்லாந்து நாட்டில் பிறந்து, தமிழகம் வந்து நெல்லைச் சீமையில் தங்கி, "திருநெல்வேலி சரித்திரம்"" எனும் ஆங்கில நூலுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு உள்ளிட்ட திராவிட மொழிகள் அனைத்தையும் ஆய்வு செய்து, "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" எனும் அரிய நூலையும் படைத்து; தமிழ் மொழியின் மேன்மையை மேதினியில் நிலைநாட்டியதுடன் தமிழைச் செம்மொழி என முதன்முதல் பறைசாற்றிய மாமேதை கால்டுவெல்!

இப்படி பலரை நாம் இப்போது மீண்டும் தூசி தட்டி நினைவுபடுத்திக்கொண்டிருப்பதற்கு மிக முக்கிய காரணம் எலெக்ஷன் வருதுங்கோ!  உங்க ஓட்டு எங்களுக்கேங்க!

1 comment:

  1. மறந்த தகவல்களை மீண்டும் நினைவுபடுத்தியற்கு நன்றி & பாராட்டுக்கள்

    ReplyDelete