Thursday 19 December 2013

நாம் மாங்காயா இல்லை (வாழைப்)பழமா? பகுதி2

தமிழகத்திற்கு பாதகமான மத்திய அரசை தூக்கியெறிய வேண்டும்!
பக்கத்திலுள்ள சீனா போன்ற பெரிய நாடுகள் மட்டுமின்றி மியான்மர் போன்ற சிறிய நாடுகளின் மிரட்டலைகூட சமாளிக்க முடியாத மத்திய அரசை தூக்கியெறியவேண்டும்!
கடந்த இரண்டரை ஆண்டுகளில் தன் தலைமையில் தமிழகத்தில் நடக்கும் நல்லாட்சி செய்த ஏறாளமான சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் பரப்பினால் அடுத்த தேர்த்தலில் இந்த மத்திய அரசை தூக்கியெறியமுடியும் என்று அதிமுக பொதுக்குழுவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா கடைசியாக அதிமுக செங்கோட்டை அடைவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார்.  இப்போது மீண்டும் தலைப்பை வாசித்துக்கொள்ளுங்கள்!

உலகிலுள்ள நாடுகளில் சிங்கப்பூர் என்பது பாதுகாப்பு விஷயத்தில் முக்கிய இடம் பிடித்துள்ள நாடு.  நாம் ஒரு நாட்டுக்கு சென்றால் அந்த நாட்டின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.  ஒருவர் விபத்தில் மரணமடைந்தார் என்றால் அதில் தவறிழைத்தவருக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.  ஆனால் சினிமாவையும் மதுவையும் வாழ்க்கையாக கொண்ட நாம் செய்த கலவரத்தால் ஐம்பத்திரண்டு பேர்களை சிங்கப்பூர் தாய் நாட்டிற்கு திருப்பியனுப்புகிறது.  பிழைக்கச்சென்ற இடத்தில் நமக்கு இதெல்லாம் தேவையா? நாம் மாங்காயா இல்லை (வாழைப்)பழமா?

ஏற்கனவே ஏகப்பட்ட சட்ட விதிமுறைகள் இருந்தும் லோக்பால் வந்துவிட்டால் யாருமே தவறிழைக்கமாட்டார்கள் என்று நம்பும் நாம் மாங்காயா இல்லை (வாழைப்)பழமா?

1 comment: